இஸ்ரேல் மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை- ஈரான் அதிகாரி

24 ஆனி 2025 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 1348
இஸ்ரேல் மீது ஈரான் எந்தவித ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என ஈரானின் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை எதிரி மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தவறிழைத்தால் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் போன்று ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் தாக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானின் அரசசார்பு ஊடகங்களும் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் ஈரான் ஏவுகணைதாக்குதலில் ஈடுபட்டது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1