Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் தலைநகரில் இருந்து - 100 பிரெஞ்சு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!!

இஸ்ரேல் தலைநகரில் இருந்து - 100 பிரெஞ்சு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!!

24 ஆனி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 706


இஸ்ரேலில் சிக்குண்டுள்ள பிரெஞ்சு பயணிகளை மீட்க பிரான்சில் இருந்து இராணுவ விமானம் நேற்று காலை புறப்பட்டுச் சென்றிருந்தது. இந்நிலையில், அங்கிருந்து 100 பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் Tel Aviv இல் இருந்து இன்று ஜூன் 24, காலை 7.30 மணி அளவில் 100 பிரெஞ்சு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுள்ளது. 

A400M  இராணுவ விமானத்தில் அவர்கள் ஏற்றப்பட்டுள்ளனர். பிரெஞ்சு பயணிகளோடு, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல பயணிகளையும் ஏற்றுக்கொண்ட்டு விமானம் புறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்