இஸ்ரேலில் இருந்து 250 பேரை வெளியேற்றிய அமெரிக்கா
24 ஆனி 2025 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 2221
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் இஸ்ரேலில் இருந்து தனது குடிமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 250 பேரை வெளியேற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 250 பேர் ஏழு விமானங்களில் இஸ்ரேலில் இருந்து புறப்படுவதற்கு உதவி செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைப்ரஸில் உள்ள ஏதென்ஸ், ரோம் மற்றும் லார்னாகா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய இடங்களில் விமானங்கள் தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கம் வார இறுதியில் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது, இது திங்களன்று கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தின் மீது பழிவாங்கும் தாக்குதலை நடத்த ஈரானைத் தூண்டியது.
இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan