Paristamil Navigation Paristamil advert login

கட்டார் மீது ஈரான் தாக்குதல்! - மக்ரோன் அமைதிக்கு கோரிக்கை!!!

கட்டார் மீது ஈரான் தாக்குதல்! - மக்ரோன் அமைதிக்கு கோரிக்கை!!!

23 ஆனி 2025 திங்கள் 23:07 | பார்வைகள் : 3517


 

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ‘அமைதி காக்கும்படி’ அனைத்து தரப்பினரிடமும் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

“கட்டாரின் நிலப்பரப்புக்குள் ஈரான் குண்டு வீசியுள்ளது. நான் எனது ஆதரவை முழுமையாக கட்டாருக்கு வழங்குகிறேன். நான் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். அனைவரும் அமைதிகாக்கும்டடி வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

”மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள்” என ஈரானை ஜனாதிபதி மக்ரோன் கேட்டுக்கொண்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்