வெப்பம்- இடி மின்னல் தாக்குதல்கள் : 50 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

23 ஆனி 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 545
சீரற்ற வானிலை!
இன்று ஜூன் 23, திங்கட்கிழமை நண்பகல் பிற்பகல் 4 மணிவரை அதிகூடிய வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 35℃ வரை வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெப்பம்!
Isère ம்ற்றும் Rhône மாவட்டங்களில் அதிகபட்சமாக 35℃ வெப்பம் நிலவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு இரு மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, Ain, Ardèche, Aude, Bouches-du-Rhône, Drôme, Gard, Haute-Garonne, Hérault, Loire, Haute-Loire, Pyrénées-Orientales, Savoie, Haute-Savoie, Tarn மற்றும் Vaucluse ஆகிய 15 மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் - மழை!
வெப்பத்தின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு நாட்டின் வட கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு என நாட்டின் ஒரு பகுதி முழுவதற்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Aube, Aude, Bouches-du-Rhône, Doubs, Drôme, Gard, Haute-Garonne, Hérault, Isère, Jura, Loire, Haute-Loire, Lozère, Meurthe-et-Moselle, Moselle, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Savoie, Haute-Savoie, Tarn, Var, Vaucluse, Vosges, Territoire de Belfort மற்றும் Andorra.