பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட - சிறுவன் கைது!!
23 ஆனி 2025 திங்கள் 09:02 | பார்வைகள் : 3926
பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்ட 17 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுவந்த விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். Daesh பயங்கரவாத அமைப்பு சார்பாக தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாகவும், யூத தேவாலயத்தின் வாசலில் வைத்து இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சிறுவன Sarthe நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரது வீடு முழுமையாக சோதனையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan