’மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த ஒரே வழி இது தான்!” - ஈரானிய ஜனாதிபதியை வலியுறுத்திய மக்ரோன்!!

22 ஆனி 2025 ஞாயிறு 20:44 | பார்வைகள் : 896
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை காலை ஈரானிய ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக உரையாடியிருந்தார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து போர் பதட்டம் அதிகரித்துள்ளது. ஈரான் அருகில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில், மேற்கொண்டு தாக்குதல்கள் எதுவும் வேண்டாம் என ஈரானிய அரசைக் கேட்டுக்கொள்ள மக்ரோன் தொலைபேசியில் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உரையாடல்” மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் என மக்ரோன் ஈரானிய ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
,”ஈரான் தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான தெளிவான உறுதிப்பாடு எடுக்காவிட்டால் அது முழு பிராந்தியத்திற்கும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் ஒரே பாதை இதுதான்." எனவும் மக்ரோன் அவரிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.