Paristamil Navigation Paristamil advert login

ஈராக்கின் குட் நகரில் பயங்கர தீ விபத்து- 60 பேர் பலி, பலர் மாயம்

ஈராக்கின் குட் நகரில் பயங்கர தீ விபத்து- 60 பேர் பலி, பலர் மாயம்

17 ஆடி 2025 வியாழன் 13:59 | பார்வைகள் : 1953


ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹைப்பர் மார்கெட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள குட் நகரில் அமைந்துள்ள ஒரு பெரிய ஹைப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் நகர சுகாதார அதிகாரிகள் மற்றும் இரண்டு காவல்துறை வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

"உறுதிப்படுத்தப்பட்ட 59 உடல்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஆனால் ஒரு உடல் மிகவும் மோசமாக எரிந்ததால் அதை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது," என்று நகர சுகாதார அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

"தீயணைப்பு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்னும் மீட்கப்படாத பல உடல்கள் உள்ளன," என்று நகர அதிகாரி அலி அல்-மாயாஹி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்கள், குட் நகரில் ஐந்து மாடி கட்டிடம் தீப்பிடித்து எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதையும் காட்டுகின்றன.

வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மாயாஹி, இந்த தீ விபத்து ஒரு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் ஏற்பட்டதாகக் தெரிவித்தார்.

குடும்பங்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டும், பொருட்களை வாங்கிக் கொண்டும் இருந்தபோது இந்த விபத்து நடந்ததாக அவர் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் பலரை மீட்டதுடன் தீயையும் அணைத்தனர் என்று ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026