பாகிஸ்தானில் கொடூர தண்ணீர் பஞ்சம்....

17 ஆடி 2025 வியாழன் 07:59 | பார்வைகள் : 274
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானின் பல இடங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் துணி துவைக்க பயன்படுத்தும் தண்ணீரை கழிவறைக்கு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில் மழை அளவு என்பது குறைந்த அளவில் மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானின் ஒரு பகுதிகள் வறண்டு போய் உள்ளது.
அதாவது பாகிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வறண்டுள்ளன.
அதேவேளையில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில், ஆண்டுக்கு 400 மிமீ முதல் 1,000 மிமீ வரை மழை பெய்யும்.
இந்த ஆண்டு பாகிஸ்தானில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பாகிஸ்தானில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. பூமிக்கடியில் 180 அடியில் தான் தண்ணீர் கிடைக்கிறது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஒரு மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்து வருகிறது. நகரமயமாக்கல், காடுகள் அழித்தல், போதிய அளவு மழை பெய்யாதது உள்ளிட்டவற்றால் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்துக்கு ஆண்டுதோறும் சென்று வருகிறது.
ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் பலரும் ஆழ்துளை கிணறுகளை ஆழமாக தோண்டி உள்ளனர். இது தண்ணீர் பஞ்சத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் அசுத்தமான தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக செயல்படாததால் அசுத்தமான தண்ணீரை டேங்கரில் கொண்டு வந்து பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் ஒரு குடும்பம் தங்களின் வருமானத்தில் 20 சதவீதத்தை தண்ணீருக்காக செலவிட வேண்ட
இதுதவிர தற்போது பாகிஸ்தான் மக்கள் தண்ணீரை மறுபயன்பாடு செய்து வருகின்றனர். அதன்படி துணி துவைக்கும் தண்ணீரை வீணாக்காமல் அதனை கழிவறைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் பஞ்சம் காரணமாக இஸ்லாமாபாத் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளி முடிவடைந்த பிறகு தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இவர்கள் அருகே உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
நாட்டில் நிலத்தடி நீர் ஒழுங்குமுறைகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது .இது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
.அதன்படி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.