காவல்துறை வீரர் தற்கொலை! - 12 ஆவது சம்பவம்!!
9 ஆடி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 9082
CRS காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜூலை 3, வியாழக்கிழமை இச்சம்பவம் Montauban (Tarn-et-Garonne) நகரில் இடம்பெற்றுள்ளது.
அந்நகரத்தின் காவல்நிலையத்தில் பணிபுரியும் CRS 28 பிரிவைச் சேர்ந்த Hugues H எனும் வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவர் இறந்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீரர் முன்னதாக Sarcelles (Val-d'Oise) நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும், அண்மையிலேயே அவர் Montauban நகரில் சேவையாற்ற சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இறுதிச்சடங்கு, இன்று ஜூலை 9, புதன்கிழமை இடம்பெற உள்ளது. இது இவ்வருடத்தில் பதிவான 12 ஆவது காவல்துறை வீரரின் தற்கொலையாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan