Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை வீரர் தற்கொலை! - 12 ஆவது சம்பவம்!!

காவல்துறை வீரர் தற்கொலை! - 12 ஆவது சம்பவம்!!

9 ஆடி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 1068


CRS காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜூலை 3, வியாழக்கிழமை இச்சம்பவம் Montauban (Tarn-et-Garonne)   நகரில் இடம்பெற்றுள்ளது.

அந்நகரத்தின் காவல்நிலையத்தில் பணிபுரியும் CRS 28 பிரிவைச் சேர்ந்த  Hugues H எனும் வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவர் இறந்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீரர் முன்னதாக Sarcelles (Val-d'Oise) நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும், அண்மையிலேயே அவர் Montauban நகரில் சேவையாற்ற சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிச்சடங்கு, இன்று ஜூலை 9, புதன்கிழமை இடம்பெற உள்ளது. இது இவ்வருடத்தில் பதிவான 12 ஆவது காவல்துறை வீரரின் தற்கொலையாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்