Eurostar இல் பயணித்தவர்களுக்கு சிக்கல்! - 8 மணிநேரம் காத்திருந்த சோகம்!!
6 ஆடி 2025 ஞாயிறு 22:59 | பார்வைகள் : 10739
Eurostar தொடருந்தில் Brussels நகரில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த 800 வரையான பயணிகள் இடை நடுவில் சிக்கிக்கொண்டனர்.
மின் வழங்கலில் ஏற்பட்ட தடை காரணமாக பா-து-கலே அருகே தொடர்ந்து நிறுத்தப்பட்டது. ஜூலை 6, இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 800 பயணிகள் அதில் பயணித்த நிலையில் Rodelinghem நகர் அருகே தொடருந்து நிறுத்தப்பட்டது.
எட்டு மணிநேரம் தொடருந்து கொஞ்சமும் அரக்காமல் அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.
கழிப்பறைகளை பயன்படுத்துவது தடுக்கப்பட்டது. குளிரூட்டியும் செயற்படவில்லை என பயணிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. கதவு, ஜன்னல்கள் திறக்கப்பட்டன.
இந்த தடைக்கு Eurostar நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan