பாதுகாப்பில் குறை - உள்துறை அமைச்சர் மீது விசாரணை!

6 ஆனி 2025 வெள்ளி 00:08 | பார்வைகள் : 1581
பரிசின் காவல்துறை தலைவர் லோரோன் நுனெஸ் ஜூன் 10ஆம் தேதி நாடாளுமன்ற சட்ட ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார் என அதன் தலைவர் அறிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் புருனோ ரத்தையோவும் PSG சேம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியின் இரவில் பாதுகாப்பு திட்டம் பயனுள்ளதாக இருக்கவில்லை என்பது தொடர்பாக பின்னர் விசாரிக்கப்படவுள்ளார்.
மே 31 சனிக்கிழமையும், ஜூன் 1 ஞாயிற்றுக்கிழமையும், PSG தனது சாம்பியன்ஸ் லீக் வெற்றியை கொண்டாடிய நேரத்தில், பாரிசைச் சுற்றிய பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டதோடு, கடைகள் பல கொள்ளையடிக்கப்பட்டன.
போல கடுமையான பாதுகாப்புச் செயலிழப்புகளிற்காக விளக்கங்கள் கேட்கும் நிலையை உருவாக்கியுள்ளன என சட்ட ஆணைக்குழு தலைவர் ப்ளோரோன் பூதியே ( Florent Boudié) தெரிவித்துள்ளார்.
ஜூன் 5 வியாழக்கிழமை இரு விசாரணைகள் அறிவிக்கப்பட்டன.
முதலில் பாரிசின் காவல் மாகாண ஆணையர் லோரோன் நுனெஸ் ஜூன் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வரவேண்டும்.
பின்னர், உள்துறை அமைச்சர் புருனோ ரத்தையோவும் நாடாளுமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது, பொதுவான பாதுகாப்பு கொள்கைகளின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்றம் கண்காணிக்கும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'கொண்டாட்டங்களில் 5,400 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது போதுமானதாக இருந்தது. பல சம்பவங்களும் சேதங்களும் தடுக்கப்பட்டன. இது பாதுகாப்பு தோல்வியாக கூற முடியாது' என பாரிசின் காவல் மாகாண ஆணையர் லோரோன் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
'பாதுகாப்பு நடவடிக்கைகள் தக்கவாறு எடுத்துக்கொள்ளப்பட்டன, அவை தேவைக்கேற்ப நடந்தன' என உள்துறை அமைச்சர் கூறினார்.
இருப்பினும், வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளால் பாதுகாப்பு முறை மீதான கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புகள் ஒழுங்காக நிர்வகிக்கப் பட்டிருந்தால் வன்முறைகளும், கடை உடைப்புகளும், வாகன எரிப்புகளும் ஏன் நடந்தன என்பது இவர்களின் கேள்வியாக உள்ளது.