Paristamil Navigation Paristamil advert login

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி

4 ஆனி 2025 புதன் 18:06 | பார்வைகள் : 319


நம்மில் ஒவ்வொருவருக்குமே பிரியாணி என்பது ஒரு எமோஷனல். பிரியாணியில் பலவிதமான பிரியாணிகள் இருந்தாலும் மட்டன் பிரியாணி மீது ஒரு தனி விதமான ஆர்வம் இருக்கும். அப்படியே அறுசுவை மிகுந்த மட்டன் தம் பிரியாணி மதுரை ஸ்டைலில் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோமா...

இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் 1 கிலோ மட்டன், 1 கிலோ சீரக சம்பா அரிசி, 6 பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய், 3 தக்காளி, 150 கிராம் பூண்டு, 100 கிராம் இஞ்சி, 1 கரண்டி கெட்டித் தயிர், 1/2 லெமன், 200 மில்லி நெய், 1 தேங்காய், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள், 2 ஸ்பூன் பிரியாணி தூள், 1 கப் கடலெண்ணெய், 1பிரியாணி இலை, 4 பட்டை, 4 கிராம்பு, 4 ஏலக்காய், 4 மராத்தி மொக்கு, 4 அன்னாச்சி பூ, 4ஜாதிபத்ரி, 2 ஸ்பூன் சோம்பு, 1/2 கட்டு புதினா, 1 கட்டு கொத்தமல்லி தழை, தேவையான அளவுஉப்பு

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, அன்னாச்சி பூ, ஜாதிபத்ரி பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் சோம்பு சேர்த்து பொரிய விட வேண்டும். பின் நறுக்கிய வெங்காயம், புதினா இலை சேர்த்து உதைக்க வேண்டும். இதற்கிடையில் இஞ்சி பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய்த்தூள், பிரியாணி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். ஒரு தேங்காயை துருவி பாலெடுத்து வைக்கவும் மட்டன் உடன் சிறிது உப்பு மஞ்சள் தூள் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து தண்ணீர் தனியாகவும் மட்டன் தனியாகவும் வடிகட்டி கொள்ளவும். பின் மசாலா பச்சை வாசனை போக வதங்கியதும் வேகவைத்த மட்டன் சேர்த்து மசாலா உடன் நன்றாக இரண்டு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

பிறகு சீரக சம்பா அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தண்ணீரை வடிகட்டி இதனுடன் சேர்க்கவும் பின் லெமன் சாறு பிழிந்து விடவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.அரிசி மட்டன் கலவையை நன்றாக கலந்து கொள்ளவும் பின் மட்டன் வேகவைத்த தண்ணீரை அளந்து ஊற்ற வேண்டும். தேங்காய் பாலை அளந்து ஊற்றவும் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் மட்டன் வேகவைத்த தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை ஊற்றவும் தேங்காயை நன்கு அரைத்து திக்கான பால் எடுக்க வேண்டும்.

எல்லாம் சேர்ந்து கலந்து கொதிக்க விடவும் பத்து நிமிடம் கொதித்ததும் அரிசி 60 சதவீதம் வெந்திருக்கும் தேங்காய் பால் மற்றும் மட்டன் வெந்த தண்ணீர் சிறிதளவு சுண்டி தண்ணீர் கொஞ்சம் இருக்கும் போது நெய்யை பரவலாக ஊற்றி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி தட்டு வைத்து மூடவும்

அடுப்பை மெல்லிய தீயில் வைத்து தட்டின் மேல் நெருப்பு கங்கை பரப்பி 20 நிமிடங்கள் வரை தம் போடவும் 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும் மேல் உள்ள நெருப்பு மட்டும் இருக்கட்டும் கீழே எரியும் தீயை அணைத்து விடவும் 20 நிமிடங்கள் கழித்து திறந்து மெதுவாக சாதம் உடையாமல் கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் மண் மணக்கும் மதுரை ஸ்டைல் மட்டன் தம் பிரியாணி ரெடியாகிவிடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்