யாழில் ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் அதிரடியாக கைது
4 ஆனி 2025 புதன் 15:07 | பார்வைகள் : 3494
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார்.
அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 20 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.
அதனை அடுத்து , 14 நாட்களுக்கு இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan