Paristamil Navigation Paristamil advert login

தமிழ் திரையுலகில் பாடகி சின்மயிக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது ? இதுதான் காரணமா?

 தமிழ் திரையுலகில் பாடகி சின்மயிக்கு ஏன் தடை  விதிக்கப்பட்டுள்ளது ? இதுதான் காரணமா?

3 ஆனி 2025 செவ்வாய் 15:21 | பார்வைகள் : 1041


2002-ம் ஆண்டு வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் “ஒரு தெய்வம் தந்த பூவே..” என்கிற பாடலை பாடியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் சின்மயி. அதன் பின்னர் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஆனால் சின்மயிக்கு டப்பிங் மற்றும் பாடுவதற்கு தமிழ் திரையுலகில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சின்மயிக்கு தடை விதித்த அப்போதைய நடிகர் சங்க செயலாளார் ராதாரவியிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராதாரவி, சின்மயி ஆண்டு சந்தாவை சரியாக கட்டவில்லை. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் எங்களிடம் எதுவும் பேசாமல் அவர் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். அங்கே வாழ்நாள் சந்தாவை முழுவதுமாக கட்டி விட்டதாக பொய் கூறினார். இதனால் தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என விளக்கம் அளித்திருந்தார். ஆனால் ராதாரவியின் இந்த பதிலுக்கு நெறியாளர் எதிர்வினை ஆற்றினார். சந்தா கட்டச் சொல்லி இருந்தாலே பிரச்சினை முடிந்திருக்கும். அதை விட்டுவிட்டு ஒருவரின் வாழ்க்கையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியால் கோபமடைந்த ராதாரவி, “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இது தேவையில்லாத வேஸ்ட் டாப்பிக். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசியிருக்கிறார். இதற்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த ராதாரவி, “சென்னையில் 70 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார். ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். டப்பிங் யூனியனுக்கு அவரால் 10% கமிஷன் வருகிறது. லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் சின்மயினால் ரூ.250 கட்ட முடியாதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அப்போது விளக்கம் அளித்து இருந்த சின்மயி, டப்பிங் யூனியிலிருந்து ஸ்ருதிஹாசன், நடிகர் விஜய், பாடகர் கார்த்திக் ஆகியோருக்கு சந்தா கட்டிக் கொள்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் கட்டவில்லை? என பதிலுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். ரூ.250-க்காக டப்பிங் மற்றும் பாடல் துறையில் இருந்து சின்மியக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் உண்மையான காரணம் அவருக்கு Mee Too பிரச்சனையில் வைரமுத்து உடன் ஏற்பட்ட மோதல்தான் என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்