இம்மானுவேல் மக்ரோனின் மெழுகு சிலை திருட்டு!!

2 ஆனி 2025 திங்கள் 15:34 | பார்வைகள் : 1347
ஜூன் 2 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, கிரீன்பீஸ் (Greenpeace) ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்ளும் பலரால், கிரேவின் அருங்காட்சியகத்தில் (Musée Grévin) இருந்து இம்மானுவேல் மக்ரோனின் மெழுகு சிலை திருடப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
ஆதாரத்தின்படி, இரண்டு பெண்களும் ஒரு ஆணும், சுற்றுலாப் பயணிகளாகக் காட்டிக் கொண்டு, 9வது வட்டாரத்தில் அமைந்துள்ள பரிஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
கைவினைஞர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களாகக் உடை மாற்றிக் கொண்டு, அவசர வெளியேற்றத்தின் வழியாக வெளியேறி, 40,000 யூரோக்கள் மதிப்புள்ள சிலையை ஒரு போர்வையின் கீழ் மறைத்து திருடி உள்ளனர்.