கிரனொபிள் - PSG வெற்றிக் கொண்டாட்டத்தில் புகுந்த சிற்றுந்து!!

1 ஆனி 2025 ஞாயிறு 14:36 | பார்வைகள் : 2142
சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில்PSG வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருந்த மக்களிடையே ஒரு மகிழுந்து புகுந்து மோதியதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் இருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
'ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நான்கு பேரை மோதியுள்ளது. இதில் இருவர் பலத்த காயங்களிற்கு உள்ளாகி உள்ளனர்,' என காவற்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதி தானாகவே காவல்துறையினரிம் சரணடைந்து, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மேலதிகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.