பரிஸ் - இஸ்ரேலிய இனப்படுகொலை நினைவு மையம் உடப்பட பல யூத எதிர்ப்புத் தாக்குதல்கள்!

31 வைகாசி 2025 சனி 15:20 | பார்வைகள் : 1823
2025 மே 30 முதல் 31ம் தேதி இரவுக்கு இடையில், பாரிஸின் 4வது வட்டாரத்தில் உள்ள நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள்—inஉடரனiபெ ஷோவா நினைவு மையம்—ஒருவரால் பச்சை வண்ணம் தெளிக்கப்பட்டு இலக்காக்கப்பட்டன. பச்சை வர்ணம் எக்பது இஸ்லாமியர்களின் நிறம் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி கண்காணிப்பு பதிவுகளின்பn, கறுப்பு உடை அணிந்த ஒரு ஆண், வெள்ளிக்கிழமை இரவு 4.30 மணியளவில், குறித்த இடங்களில் வர்ணம் வீசியது உறுதி செய்யப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட இடங்கள்:
Tournelles யூதத் தேவாலயம் (Synagogue)
யூத இனப்படுகொலையான ஷாஹோ நினைவு மையம் (Mémorial de la Shoah)
Agoudas Hakehilos யூதத் தேவாலயம் (Synagogue)
Chez Marianne உணவகம்
போன்ற நான்கு இடங்களும் பாரிஸ் மையப் பகுதியில் ஒரே வட்டாரத்தில் உள்ளன.
சம்பவ இடங்களில் ஒன்றின் முன்பாக பூசிய பச்சை வர்ணம் உள்ள கொள்கலனும் மீட்கப்பட்டுள்ளது.
ஜோன்-லுக் மெலோன்சோன், ரிமா ஹசான் போன்றவர்களின் தொடர்சியான யூத எதிர்ப்பு வாதத்தையும் குற்றச் செயல்களையும் ஊக்குவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் மாநகரபிதா அன் இதால்கோ 'இந்த மிரட்டல்களை கடுமையாகக் கண்டிக்கிறேன். இப்படியான வெறுப்பு நடவடிக்கைகளிற்கு எங்கள் நகரிலும் குடியரசிலும் இடமில்லை. சுத்தம் செய்யும் குழுவை உடனடியாக அனுப்புமாறு கேட்டிருக்கிறேன்; நாங்கள் புகார் செய்யப்போகிறோம்' என கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ, 'யூத சமுதாயத்தை குறிவைக்கும் இந்த அருவருப்பான செயல்கள் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்துகின்றன' எனக் கண்டித்தார்.