கருக்கலைப்பு மாத்திரையின் தந்தை எத்தியேன்-எமில் போலியு சாவு!

31 வைகாசி 2025 சனி 13:17 | பார்வைகள் : 1458
பிரான்சின் கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்தவர் என உலகளவில் புகழ்பெற்ற பேராசிரியர் எத்தியேன்-எமில் போலியு (ETIENNE-EMILE BAULIEU), வெள்ளிக்கிழமை தனது பரிஸ் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98.
மருத்துவர் மற்றும் விஞ்ஞானி என்ற இரட்டை அடையாளத்தில், ஸ்டெராய்ட் ஹார்மோன்கள் குறித்த அவரின் ஆய்வுகள், அறிவியல், மருத்துவம் மற்றும் சமூகவியல் பரிமாணங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
'அறிவியல் மூலம் முன்னேற்றங்களை சாதிப்பதில் இருந்த அவரது உறுதி, பெண்களின் சுதந்திரத்தை ஆதரித்த அவர், அனைவரும் சிறந்த வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்பதிலான அவரது நோக்கம் தான் இவரின் ஆய்வுகளை வழிநடத்தியது.' பற்றிய ன்பது இவர் பற்றிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.
2023ஆம் ஆண்டில், 'நான் வேலை செய்யவில்லை என்றால், சலிப்பாக இருக்கும்' என்று அவர் கூறியிருந்தார். 96 வயதிலும், இன்செர்ம் (Inserm) நிறுவனத்தில் தனது அலுவலகத்தில் இருந்து ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
'அறிவியலும் முன்னேற்றமும், மனித நலனுக்கான பயன்பாடுகளும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்றே நான் எப்போதும் முயன்றேன்.'
1926 டிசம்பர் 12, ஸ்ரார்ஸ்பேர்க்கில் பிறந்த இவரின் இயற்கை பெயர் எத்தியேன் பிளூம். மூன்று வயதில் தந்தையை இழந்த இவர், முன்னாள் வழக்கறிஞரும் தீவிர பெண் உரிமை ஆதரவாளருமான தாயால் வளர்க்கப்பட்டார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில், கிரெனொபிளுக்கு சென்று 15வது வயதில் விடுதலை இயக்கத்தில் (Résistance) சேர்ந்தார். அப்போது தான் தனது பெயரை எத்தியேன்-எமில் போலியு என மாற்றினார்.
போருக்குப் பிறகு, அறிவியல் மருத்துவம் இரண்டிலும் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார். ஸ்டீராயிட் ஹார்மோன்கள் மீது அவரது கவனம் திரும்பியது.
இவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய ஒரு முக்கிய கண்டுபிடிப்பு – மூலக்கூறு RU-486. இது, கருப்பைச் சுவரில் கருமுட்டையை உறுதியாக்கும் புரொஜெஸ்டெரோன் ஹார்மோனின் எதிரியாக செயல்படக்கூடிய ஒரு 'ஆண்டி-ஹார்மோன்' ஆகும்.
1982 இல், ருசல்-யூகிளாஃப் (laboratoire Roussel-Uclaf) ஆய்வகத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய RU-486, அறுவைச் சிகிச்சையில்லாத, மலிவான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்புக்கு ஒரு மாற்று வழியாக அறிமுகமாகியது.
ஆனால், அமெரிக்காவின் கருக்கலைப்புக்கு எதிரான இயக்கங்கள் அவரை 'மரண மாத்திரை' உருவாக்கியவராக கூறி தாக்கின.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாத்திரையை வெளியிட தயங்கிய ருசல்-யூகிளாஃப் நிறுவனத்தை கட்டாயப்படுத்தினார்.
1988 இல், பிரான்சின் சுகாதார அமைச்சர் க்ளோட் எவின், 'இது பெண்களின் நெறிசார் சொத்து' என்று கூறி, மாத்திரையை விற்பனைக்கு கட்டாயமாக அனுமதிக்கச் செய்தார்.
1989 ஆம் ஆண்டு, அவர் லாஸ்கர் பரிசை ( prix Lasker) பெற்றார் – இது நோபல் பரிசுக்கு முன்னோடி என கருதப்படுகிறது. அதன் பின், பல நாடுகளையும் RU-486 ஐ அனுமதிக்க பெரிதும் உழைத்தா