இன்று : 33°C வரை வெப்பம்!!

31 வைகாசி 2025 சனி 08:35 | பார்வைகள் : 1151
இன்று மே 31, சனிக்கிழமை நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 33°C வெப்பம் இன்று பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதிகளில் இந்த உயர் வெப்பம் நிலவும் எனவும், நாடு முழுவதும் சராசரியாக 30.5°C எனும் வெப்பம் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் பரிசில் நண்பகலின் பின்னர் 31°C வரை வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப உயர்வானது மே மாத இறுதியில் நிலவும் பொதுவான வெப்பத்தோடு ஒப்பிடுகையில் 10°C மேலதிகமாக பதிவாகிறது என தெரிவிக்கப்படுகிறது.