Paristamil Navigation Paristamil advert login

பரிசில் வன்முறைகள் ஏற்படும் அச்சம் – உள்துறை அமைச்சரின் எச்சரிக்கை!!

பரிசில் வன்முறைகள் ஏற்படும் அச்சம் – உள்துறை அமைச்சரின் எச்சரிக்கை!!

30 வைகாசி 2025 வெள்ளி 17:19 | பார்வைகள் : 1961


சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி மே 31ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் PSG மற்றும் இண்டர் மிலான் இடையேயான  இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு பரிசில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனோ ரத்தையோ, 'பரிசில் உள்ள ரசிகர் மையங்கள் மற்றும் அருந்தகங்களில் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.

போட்டி நேரத்தில் பார்க் து ப்ரன்ஸ் அரங்கில் 48,000 பேர் திரண்டு போட்டியை பெரிய திரையின் மூலம் பார்வையிட உள்ளனர.

லிவர்ப்பூல் போலான வன்முறைச் சம்பவம் போல் இங்கு மீண்டும் நிகழக்கூடாது. முந்தைய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்கில், லிவர்ப்பூலில் இடம்பெற்ற வேகமாக வண்டி ஓட்டிய தாக்குதலைத் தவிர்க்க, 'வாகனத் தாக்குதல்களைத் தடுக்கும் பாதுகாப்புத் தடை அமப்புக்களைக் கட்டாயம் நிறுவ வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

போட்டியின் போது காவற்துறையினரின் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும். 'Sentinelle' படைகள் நகரத்தின் முக்கிய பகுதிகளில் நேரடி கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

சோம்ப்-எலிசேஸ் வீதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

வெற்றியடையும் நிலையில் PSG ரசிகர்களிடையே கூட்டம், கொண்டாட்டம் மற்றும் சீர்கெட்ட செயல்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில், முக்கிய வீதிகள் (8வது வட்டாரம்) 30 மே அன்று மாலை 7 மணி முதல் மூடப்படவுள்ளன என என உள்துறை அமைச்சகம்ள் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்