சோம்ப்ஸ்-எலிசேயில் 4,500 காவல்துறையினர் குவிப்பு!!
30 வைகாசி 2025 வெள்ளி 12:36 | பார்வைகள் : 10864
PSG எதிர் Inter அணிகளுக்கிடையே இடம்பெற உள்ள சாம்பியன் லீக் இறுதிப்போட்டிக்காக சோம்ப்ஸ்-எலிசே பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் முனிச் நகரில் உள்ள Allianz Arena அரங்கில் நாளை இரவு இடம்பெற உள்ள இந்த போட்டி, சோம்ப்ஸ்-எலிசேயில் இராட்சத திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதனைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதை அடுத்தே சோம்ப்ஸ்-எலிசே பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 7 மணியுடன் மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மே 31, சனிக்கிழமை நண்பகல் முதல் அங்கு போக்குவரத்து தடைகள் விதிக்கப்பட்டு, பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. ரசிகர்கள் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan