பாகிஸ்தானில் 4.4 ஆக பதிவு ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

29 வைகாசி 2025 வியாழன் 20:53 | பார்வைகள் : 1017
பாகிஸ்தானில் 29-05-2025 மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி மாலை 4.06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.14 டிகிரி வடக்கு
அட்சரேகையிலும், 70.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.