தேசிய தினத்தில் புதிய கவசவாகனப் பேரணி!!
29 வைகாசி 2025 வியாழன் 18:09 | பார்வைகள் : 6228
தேசிய ஜோந்தார்மரியின் கடற்படையை நவீனமயமாக்குவதற்காக 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய கவச வாகனங்களான சென்தோர் (Les Centaure), ஜூலை 14 ஆம் தேதி அணிவகுத்துச் செல்லும். இந்த வாகனங்கள் ஏற்கனவே சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

மக்களின் பாதுகாப்பிற்காக புதிய கவச வாகனம் - சென்தோர் - பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது. செந்தோர் என்பது மனித முகமும் குதிரை உடம்பும் கொண்ட போர்க்கடவுளின் பெயராகும்.
2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 12 தொன்களுக்கு மேல் எடையுள்ள இந்த புதிய கவச வாகனங்கள், குறிப்பாக நகர்ப்புற வன்முறையின் போது, தேசிய ஜோந்தார்மரியின் கடற்படையை நவீனப்படுத்தும்.
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 90 புதிய வாகனங்கள், சமகால களங்களிற்கு மிகவும் பொருத்தமானவை. பத்து பேரை (மூன்று இயக்குநர்கள் மற்றும் ஏழு பயணிகள்) கொண்டு செல்லும் திறன் கொண்ட, 3.8 மீட்டருக்கு மேல் உயரமும் 7.5 மீட்டருக்கும் அதிகமான நீளமும் கொண்ட சென்டார், புதுமையானது.

இந்த வாகனங்களின் அணிவகுப்பை எதிர்வரும் ஜுலை 14ம் திகதி பார்க்கலாம் என தேசிய ஜோந்தார்மினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan