விற்ற காரை திரும்ப பெற்ற பெண்!மோசடி செய்து வாங்கிய நபர் கைது!
28 வைகாசி 2025 புதன் 21:36 | பார்வைகள் : 4934
Sevran (Seine-Saint-Denis) வசிக்கும் ஒரு 30 வயதுடைய பெண், தனது Volkswagen Tiguan காரை 10,000 யூரோக்களுக்கு விற்றார். ஆனால் வாங்கிய நபர் பணப் பரிவர்த்தனை வெற்றிகரமாக நடைபெறாத காசோலையைக் கொடுத்துள்ளார்.
விற்ற பெண் ஏமாற்றபட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அந்த SUV காரை இணையத்தில் 20,000 யூரோக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்த்துவிட்டு, அவர் விற்பனையாளருடன் நேரில் சந்திக்க முடிவுசெய்துள்ளார்.
காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சந்திப்பு நடந்த இடத்தில் காவல் துறையினர் இரகசிய கண்காணிப்பில் இருந்ததால் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.
இவர் தான் ஆரம்பத்தில் காசோலையுடன் மோசடி செய்தவர் என்பதை பெண் உறுதிபடுத்தினார். கைது செய்யப்பட்ட நபர் 23 வயதானவர் மற்றும் Sotteville-lès-Rouen (Seine-Maritime) பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan