பிரேசிலில் புத்தம் புதிய பொம்பிதூ மையம்

28 வைகாசி 2025 புதன் 20:42 | பார்வைகள் : 899
பிரான்ஸ் மற்றும் பிரேசில் இடையே ஏற்பட்டுள்ள புதிய கலாசார ஒத்துழைப்பின் அடையாளமாக, பாரானா பொம்பிதூ மையம் (Centre Pompidou o Paraná) என அழைக்கப்படும் ஒரு புதிய கலாசார மற்றும் கலை நிலையம், 2027ஆம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட உள்ளது.
இது, பிரேசிலின் பரானா மாநிலத்தில், உலக புகழ்பெற்ற ஈகுவாசு அருவிகளின் அருகாமையில், மூன்று நாட்டு எல்லகைள் சந்திக்கும் பிரதேசத்தில் (Paraguay – Brésil – Argentine) உருவாக இருக்கிறது.
இந்த மையம், பிரெஞ்சு கலாசார அமைச்சகத்துடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். கலாசார அமைச்சர் ரஷிதா தாத்தி, இந்த ஒத்துழைப்பை 'முக்கியமான கலாசார பாலம்' எனத் தெரிவித்துளளார்.
இந்த மையத்தில்
கலைக் கண்காட்சிகள்
நாடகங்கள், திரைப்பட விழாக்கள்
சிறப்பு கருத்தரங்குகள்
கலைஞர்களுக்கான குடியிருப்புகள்
அனைத்தும் இதில் இடம்பெற உள்ளன.
சமீபத்தில் உலகளாவிய பாரிஸ் பொம்பிதூ மையங்கள்
மாலாகா (ஸ்பெயின்),
ஷாங்காய் (சீனா),
பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்),
அல்உலா (சவூதி அரேபியா)
பின்னர் உருவாகும் அண்மைய சர்வதேச கிளையாக சீயூல் (தென் கொரியா) கூட விரைவில் சேர உள்ளது.
பரிஸ் பொம்பிதூ மையத்தின் வண்ணவயமான குழாய்களின் அமைப்பிவ் இந்த புதிய பிரேசில் மையமும் அமையும்.
இதில் மேலும்
பொதுக்குடிமைக்கு திறந்த வெளியரங்கு
பல்வேறு கலைப் பயிற்சி மையங்கள்
பரிசோதனைக் கலை ஆய்வுகள்,
நூலகம்
உணவகம்
கலைப் பொருட்களிற்கான விற்பனை மையங்களும் அமைய உள்ளன.