Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் அணுஆயுத மேம்பாட்டில் தீவிரம்

பாகிஸ்தான் அணுஆயுத மேம்பாட்டில் தீவிரம்

27 வைகாசி 2025 செவ்வாய் 19:04 | பார்வைகள் : 3352


இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் அணுஆயுத மேம்பாட்டில் தீவிரம் காட்டிவருகிறது.

இந்தியாவின் Operation Sindoor தாக்குதல் பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டலை பூரணமாக முறியடித்துவிட்டது.

இந்த வெற்றிக்குப் பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "அணுஆயுத அடிப்படையிலான மிரட்டலை இந்தியா இனி சகித்துக்கொள்ளாது" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் தற்போது சுமார் 170 அணுஆயுதங்களை கொண்டுள்ளது. இதில் 36 விமானம் மூலம் ஏவப்படும் வகைகளும், 126 நிலைத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், 8 கடற்படையைச் சார்ந்த ஏவுகணைகளும் உள்ளன.

பாகிஸ்தான் அணுஆயுதங்களை நவீனமாக்கி வருகிறது என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் ஆபத்தான அணுஆயுத கையாளுதலை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என IAEA-வை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் திடமான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தன் அணு ஆயுத திறனை விரைவாக மேம்படுத்த முயல்கிறது. ஆனால் இந்தியாவின் நிலை தெளிவாகும்: மிரட்டல்கள் இனி பயனளிக்காது.
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026