Paristamil Navigation Paristamil advert login

வவுனியா ஓமந்தை பகுதியில் கோர விபத்து கணவன் பலி - மனைவி, மகன், மாமனார் படுகாயம்

வவுனியா ஓமந்தை பகுதியில் கோர விபத்து கணவன் பலி - மனைவி, மகன், மாமனார் படுகாயம்

26 வைகாசி 2025 திங்கள் 10:43 | பார்வைகள் : 1441


வவுனியா ஓமந்தை பகுதியில்  திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே  சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன்  மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்