வெப்பத்தின் பின்னர் இடிமின்னல் - 44 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

22 ஆனி 2025 ஞாயிறு 08:45 | பார்வைகள் : 1115
இன்று ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல் காரணமாக 44 மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு - தெற்கு மாவட்டங்களில் இந்த இடிமின்னல் தாக்குதல்கள் பதிவாகும் எனவும், இல் து பிரான்ஸ் மாகாணத்தில் மிதமான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சின் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Nord, Pas-de-Calais, Somme, Seine-Maritime, Eure, Calvados, Orne, Mayenne, Sarthe, Loire-Atlantique, Maine-et-Loire, Vendée, Moselle, Meurthe-et-Moselle, Meuse, Vosges, Haute-Marne, Haute-Savoie, Côte-d'Or, Doubs, Jura, Saône-et-Loire, Ain, Rhône, Loire, Allier, Puy-de-Dôme, Cantal, Haute-Loire, Ardèche , Lozère, Aveyron, Gard, Hérault, Tarn, Aude, Pyrénées-Orientales, Andorra, Ariège, Haute-Garonne, Hautes-Pyrénées, Pyrénées-Atlantiques, Haute-Corse, Sud Corsica.
ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகபட்சமாக 36°C வரை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் Cher மாவட்டத்தில் 39.5°C பதிவாகியிருந்தது.
நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.