இஸ்ரேல் தாக்குதல் நிறைவடைந்தபின் தான் பேச்சுவார்த்தை: ஈரானின் பதில்!
21 ஆனி 2025 சனி 16:56 | பார்வைகள் : 11780
மத்திய கிழக்கில் நிலவும் போரின் பின்னணியில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உடன் தொலைபேசி உரையாடலில் ஈரானுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை ஐரோப்பியர்கள் விரைவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அபாயங்களை தவிர்க்கவும் இது முக்கியம் என்றும், பிரெஞ்சு குடிமக்கள் செசீல் கோலர் (Cécile Kohler) மற்றும் ஜாக் பரிஸ் (Jacques paris) ஆகிய இருவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், மக்ரோன் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளார். "ஈரான் ஒருபோதும் அணுகுண்டு பெறக்கூடாது" என்றும், அதன் நோக்கங்கள் அமைதியானவை என்பதை உறுதியாக நிரூபிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஈரான் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தைகள், "இஸ்ரேலின் தாக்குதல் நிறைவடைந்த பிறகே" ஈரான் பேச்சுவார்த்தையை "கருத்தில் கொள்ள தயாராக" இருப்பதாக கூறியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan