Paristamil Navigation Paristamil advert login

1600 கோடி கடவுச்சொற்கள் கசிவு: இணைய உலகை அதிரவைத்த சைபர் திருடர்கள்!

1600 கோடி கடவுச்சொற்கள் கசிவு: இணைய உலகை அதிரவைத்த சைபர் திருடர்கள்!

20 ஆனி 2025 வெள்ளி 15:19 | பார்வைகள் : 570


2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல், சைபர் குற்றவாளிகள் களவாடிய 1600 கோடி கடவுச்சொற்கள் மற்றும் கணக்குத் தகவல்களை Cybernews ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்தக் குற்றச்செயல்கள், Google, Apple, Facebook, GitHub, Telegram மற்றும் அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சேவைகளுக்கான அணுகலை திறக்கின்றன. சிறிய தொகுப்புகள் 1.6 கோடியையும், பெரிய தொகுப்புகள் 350 கோடியையும் கொண்டுள்ளன.

இந்தத் தகவல்களை திருட "Infostealer" என்ற வன்முறை மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இரட்டை அடையாள உறுதிப்படுத்தல் இல்லாத நிறுவனங்கள் அதிக ஆபத்தில் உள்ளன. இந்தக் கடவுச்சொற்கள் வழியாக கணக்குகள் கைப்பற்றப்படலாம்.

அடையாள திருட்டும், இலக்குப்படுத்தப்பட்ட வங்கிக்கணக்கு  திருட்டு தாக்குதல்களும் நடைபெறலாம். உங்கள் தகவல்கள் கசிய்ந்துள்ளதா என்பதைப் பார்வையிட Cybernews, F-Secure மற்றும் Have I Been Pwned போன்ற தளங்களை பயன்படுத்தலாம்.

திருட்டுகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை, ஆனால் அது சைபர் குற்றவாளிகள் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்