Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த பெண் திடீர் மரணம்

யாழில் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த பெண் திடீர் மரணம்

20 ஆனி 2025 வெள்ளி 10:18 | பார்வைகள் : 220


 

யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்

காரைநகர் களபூமியை சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா என்ற 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆலயத்திற்கு செல்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் தயாராகிக்கொண்டிருந்த வேளை , திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

வீட்டில் இருந்தோர் அவரை உடனடியாக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்