Paristamil Navigation Paristamil advert login

நாங்கள் நினைத்தால் அழித்து விடுவோம் - ட்ரம்ப் எச்சரிக்கை!

நாங்கள் நினைத்தால் அழித்து விடுவோம் - ட்ரம்ப் எச்சரிக்கை!

20 ஆனி 2025 வெள்ளி 05:00 | பார்வைகள் : 1094


இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களில் மீதான விமானக் குண்டுவீச்சுகளை மேற்கொண்ட பிறகு, ஈரான் மற்றும் அமெரிக்காவின் உறவுகள் திரும்ப முடியாத ஒரு முடிவை எட்டும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில், வெள்ளைமாளிகை நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஈரானின் உச்ச மதத் தலைவர், அலி அயத்துல்லா கொமேனி,

«நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம்.இந்த போர்களில் அமெரிக்கா தலையீடு செய்தால், அவர்களிற்கு மீள முடியாத மோசமான பாதிப்புகள் ஏற்படுத்துவோம்»  எனவும் எச்சரித்துள்ளார்.

«ஈரான் எந்தவொரு நிபந்தனையுமின்றி சரணடைய வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் கொமேனியை கொல்லக்கூடிய திறன் எங்களிடம் உள்ளது» என பதிலுக்கு எச்சரித்துள்ளார் அமெரிக்கத் தலைவர் டொனால்டு டிரம்ப்.

இதனுடன், 1989 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கும் அயத்துல்லா கொமேனி, பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும், இந்த போர் மோதலில் மூலம் தனது இடத்தை தக்க வைக்க முயற்சிக்கிறார் என்றே பலரும் கருதுகின்றனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்