வரலாற்றை மாற்றி எழுதுவோம் - கொமேனிக்கு எதிராக ஈரான் இளவரசர்!

20 ஆனி 2025 வெள்ளி 00:24 | பார்வைகள் : 604
இஸ்ரேலுக்கு எதிராக இரானுடன் நடைபெறும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போதைய அரசியல் ஆட்சி வீழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இரானின் இளவரசரும் எதிரணித் தலைவருமான ரேசா பஹ்லவி (Reza Pahlavi) தெரிவித்துள்ளார்.
«தற்போது ஒரு துரோகியாக நிலக்கீழ் பதுங்கு அறைக்குள் ஒளிந்திருக்கும் ஒருவரை நாம் காண்கிறோம். அவர் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் விட்டுவிட்டுள்ளார். இந்த சூழ்நிலை மிக விரைவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகத் தெரிகிறது. இஸ்லாமியக் குடியரசின் முடிவே, கடந்த 46 ஆண்டுகளாக ஈரானிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களில் இருந்து விடுதலை கிடைக்கும்»
எ«திர்காலம் நம்பிக்கையூட்டக்கூடியது. இந்த வரலாற்று திருப்புமுனையை நாம் ஒன்றாக கடந்து விடுவோம். ஆட்சி வீழ்ந்த பின் முதல் நூறுல நாட்களிற்குள் மாற்றத்திற்கான காலப்பகுதியும் அதனைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக அரசு அமைப்பதற்கும் தகுந்த திட்டங்களுடன் நாங்கள் தயாராக இருக்கிறோம்»
எனவும் இளவரசர் ரேசா பஹ்லவி தெரிவித்துள்ளார்.