Paristamil Navigation Paristamil advert login

ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு

ஒரே மாதிரி உள்ள 1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் - அதே ஈரான் போர், அமெரிக்கா தலையீடு

19 ஆனி 2025 வியாழன் 17:13 | பார்வைகள் : 114


1941 மற்றும் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டிகள் ஒரே மாதிரி உள்ளது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

1941 ஆம் ஆண்டின் நாட்காட்டி போல், 2025 ஆம் ஆண்டின் நாட்காட்டியும் அச்சு பிசகாமல் ஒன்று போல் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2025 ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை தொடங்குவது போல், 1941 ஆம் ஆண்டும் புதன்கிழமை தொடங்கி அதன் பின்னரான நாட்களும் ஒன்று போல் உள்ளது.

இந்நிலையில், 1941 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களும், 2025 ஆம் ஆண்டில் நிகழுமா என நெட்டிசன்கள் அச்சமடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேர் பயணிதத்தில், ஒருவர் மட்டும் தப்பிக்க 241 பேரும் உயிரிழந்தனர்.

அதே போல், 1941 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விமான விபத்தில், 15 பேர் பயணித்ததில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க 14 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 1941 ஆம் ஆண்டு போர்களுக்கு குறைவில்லாத நாடாக இருந்தது.

ஜெர்மனி, சோவியத் ஒன்றியம் மீது போர் தொடுத்தது.

அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியன் மூலம் அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் இழுத்தது.

2ஆம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால், உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 319 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், ஜப்பானில் 2025 ஆம் ஆண்டு பெரிய அளவிலான சுனாமி இந்த ஆண்டும் ஏற்படும் என நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கையை தொடர்ந்து பலரும் ஜப்பானின் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

மேலும், 2 ஆம் உலகப்போரில் ஈரான் நடுநிலை நாடாக இருப்பதாக அதன் அரசர் ரெசா ஷா பஹலவி அறிவித்திருந்தார்.

ஈரானின் மீது Operation Countenance என்ற பெயரில் பிரித்தானிய மற்றும் சோவியத் ஒன்றியம் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்ததோடு, அதன் அரசர் ரெசா ஷா பஹலவி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

அதே போல், தற்போதும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் அதன் மீது போர் தொடுத்துள்ளது.

அன்றைய ஈரான் அரசர் ரெசா ஷா பஹலவி கைது செய்யப்பட்டது போல், இன்றைய ஈரான் உச்சத்தலைவர் அலி காமேனியை கொல்ல அல்லது ஆட்சி மாற்றம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

அன்று ஜப்பான் அமெரிக்கா தளங்களை தாக்கி, அமெரிக்காவில் போரில் இழுத்தது போல், அமெரிக்கா ஈரான் போரில் தலையிட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் தாக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.   
    
நன்றி lankasri
 

வர்த்தக‌ விளம்பரங்கள்