வெடித்தது அணுகுண்டு! - பொலினீசியாவிடம் பிரான்ஸ் மன்னிப்புக்கேட்கவேண்டும்!!
18 ஆனி 2025 புதன் 08:30 | பார்வைகள் : 7444
பசுபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பொலினீசியாவிடம் பிரான்ஸ் மன்னிப்புக்கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1966 ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பிரான்ஸ் பொலினீசியா தீவுக்கூட்டங்களுக்கு அருகே அணுகுண்டு வெடிக்கவைத்து சோதனை மேற்கொண்டிருந்தது. பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதால் பொலினீசியா கடற்பிராந்தியத்தை பிரான்ஸ் தேர்ந்தெடுத்தது. இதனால் French Polynesia நாட்டுக்குச் சொந்தமான தீவுகளில் வசிப்போர் பல சுகாதார தாக்கங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதனால் பிரான்சின் இந்த செயற்பாட்டுக்கு மன்னிப்புக்கோர வேண்டும் என தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. விசாரணைகள் ஆணையம் (commission d'enquête) இதனை வலியுறுத்தியுள்ளது. இந்த மன்னிப்புக்கோரல் இரு தரப்பையும் அமைதியான சமமான பாதையில் கொண்டுவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan