"குண்டுகளை வீசி ஜனநாயகத்தை கொண்டுவர முடியாது": பிரான்ஸ் எம்பி உரையால் சர்ச்சை!!
17 ஆனி 2025 செவ்வாய் 23:38 | பார்வைகள் : 8801
பிரான்சில் உள்ள இஸ்ரேல் தூதுவர் ஜோஷுவா சார்க்கா (Joshua Zarka), எம்பி கிளெமன்டின் ஒட்டையின் (Clémentine Autain) "இஸ்ரேல் உலகத்துக்கே ஒரு அபாயம்" என்ற கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் இதை "விஷயங்களை இப்படிச் சித்தரிப்பது விதிவிலக்கானது" என்று கூறியதுடன், « இஸ்ரேல் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, செய்யவேண்டிய கடுமையான வேலையை செய்கிறது என்றும், ஈரான்தான் மத்திய கிழக்கில் நிலையை குழப்பும் நபராக உள்ளதென்றும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரானில் அணுசக்தி ஆபத்தை தடுக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு எதிராக, கிளெமன்டின் ஒட்டை இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவை என்றும், குண்டு வீசுவதால் ஜனநாயகத்தை கொண்டு வர முடியாது என்றும் விமர்சித்துள்ளார். அவர் இஸ்ரேலை ஒரு உலக அபாயமாக குறிப்பிட்டு, நாம் மூன்றாவது உலகப்போருக்குள் நுழைந்துள்ளோம் என எச்சரித்துள்ளார்.
இதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் அணு சக்தி அமைப்பு ஈரானின் அணு ஒப்பந்த மீறலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan