லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு

17 ஆனி 2025 செவ்வாய் 13:13 | பார்வைகள் : 161
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதல் காரணமாக, லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், அந்நாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைகள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு அறிக்கையூடாக வெளியிட்டுள்ளது.
எனவே, இலங்கையர்கள் நெரிசலான இடங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவும், இரவில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது தங்கள் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகலை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவசரகாலத்தின் போது இலங்கையர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களின் பட்டியலையும் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய +961 81549162, +0961 81363894, +961 81685186, +961 81985603, +961 76062867 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.