Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

”இம்மானுவல் மக்ரோனை சரமாரியாக கடிந்து தள்ளிய ட்ரம்ப்!” - கனடாவில் இருந்து வெளியேறி பரபரப்பு!!

”இம்மானுவல் மக்ரோனை சரமாரியாக கடிந்து தள்ளிய ட்ரம்ப்!” - கனடாவில் இருந்து வெளியேறி பரபரப்பு!!

17 ஆனி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 4535


 

கனடாவில் இடம்பெற்று வரும் G7 மாநாட்டில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேறி, வாஷிங்டன் திரும்பியிருந்தார். அவர் ஈரானுடன் அமைதிப்பேச்சுவார்த்தைக்காக அவசரமாக புறப்பட்டார் என ட்ரம்பின் அவசர பயணம் குறித்து இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “அமைதிப்பேச்சுவார்த்தை” எனும் வார்த்தை ட்ரம்பை கோபமூட்டியுள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்த எந்த முடிவும் அமெரிக்கா எடுக்காது எனவும், அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு ஈரான் சம்மதிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் தாக்குதல் தொடரும் எனவும் ட்ரம்ப் சரவெடியாக தெரிவித்தார்.

அத்தோடு, “இம்மானுவல் எப்போதும் தவறான பக்கத்தில் நிற்கிறார். நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை மக்ரோன் அறிந்திருக்கவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தையால் சாதிக்கக்கூடியது எதுவும் இல்லை. மக்ரோனின் உள்நோக்கம் என்ன என்பது புரியவில்லை. ஆனால் அவர் எப்போதும் தவறான பக்கத்தில் நிற்கிறார்!” என ட்ரம்ப் பொரிந்து தள்ளியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்