Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் நடுநிலை – சுயநலமா? இராஜதந்திரமா?

மக்ரோன் நடுநிலை – சுயநலமா? இராஜதந்திரமா?

17 ஆனி 2025 செவ்வாய் 03:00 | பார்வைகள் : 1057


இஸ்ரேலும் ஈரானும் கடந்த சில நாட்களாக தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மக்ரோன், இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்கும் போதும், ஈரானையும் மோசமாக விமர்சிக்காமல், நடுநிலையை பிடித்து நிற்கிறார்.

'நாங்கள் விலக வேண்டிய சூழ்நிலை'

இஸ்ரேலின் தாக்குதல், ஈரானின் உரானியம் மேம்பாட்டுத் திறனை குறைத்ததாக மக்ரோன் தெரிவித்தாலும், அதற்கு ஆதரவு தரவில்லை. அவரிடம் இருந்து எந்தத் தெளிவான நிலைப்பாடும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர்.

ஈரானின் அணு முயற்சி – பிராந்தியத்துக்கும் ஐரோப்பாவுக்கும் அபாயம்

" ஈரான் அணு ஆயுதம் உருவாக்கும் பாதை, பிராந்திய சமநிலைக்கும், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும்' என மக்ரோன் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் சிக்கலும் புதிய அபாயம்

ஈரான் ஹோர்மூஸ் வளைகுடாவை அடைத்தால், உலக எரிபொருள் சந்தை பாதிக்கப்படும் என்பதாலும், மக்ரோன் மிகவும் விலகாமல் பேச முயற்சிக்கிறார்.

ஐரோப்பா மௌனத்தில்

மக்ரோன், ஐரோப்பாவை மீண்டும் இராஜதந்திரக் கட்டமைப்புக்குள் இழுக்க முயற்சிக்கிறார். ஆனால் தற்போது வரை, அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்