Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தெஹ்ரான் வான்வெளியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள இஸ்ரேல்

தெஹ்ரான் வான்வெளியை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள இஸ்ரேல்

17 ஆனி 2025 செவ்வாய் 01:51 | பார்வைகள் : 3805


ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

மேலும், தெஹ்ரானின் வான்வெளியை இஸ்ரேலிய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களை அடைய நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தெஹ்ரான் குடிமக்களிடம் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்யோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றது.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போரின் முடிவு தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. இந்நிலையில் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்திவருகிறது.
ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியமை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்