பெருவில் நிலநடுக்கம் ஒருவர் பலி
16 ஆனி 2025 திங்கள் 22:51 | பார்வைகள் : 2613
பெருவை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பெருவின் மத்திய கரையோர பகுதியில் இந்த பூகம்பம் மையம்கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லிமாவின் வடபகுதியில் தனது வாகனத்திற்கு வெளியே நின்றிருந்த 36 வயது நபர் ஒருவர் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நான்காவது மாடியின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வீதிகளும் கல்வி நிலையங்களும் சேதமடைந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளிற்குள் சிக்குண்ட வாகனங்களையும்,சேதமடைந்த வீடுகளையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan