விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா?

16 ஆனி 2025 திங்கள் 18:51 | பார்வைகள் : 118
விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் மீது கோழியை வீசி சோதிக்கப்படுகிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேர் உயிரிழந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்திற்கு, பறவைகள் விமானத்தின் மீது மோதியதும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாகவும், பறவை விமானத்தின் மோதி பல்வேறு விமான விபத்துகள் ஏற்பட்டு, பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது.
விமானம் பறக்கும் வேகத்திற்கு விமானத்தின் மீது பறவைகள் மோதினால், விமானத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தும்.
அதே போல், விமான என்ஜினுக்குள் பறவை சிக்கிக்கொண்டால், விமான விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.