Neuilly-sur-Marne : தடைசெய்யப்பட்ட பகுதியில் நீந்திய சிறுவன் பலி!!
16 ஆனி 2025 திங்கள் 11:35 | பார்வைகள் : 6674
குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட ஆற்றுப்பகுதி ஒன்றில் தடையை மீறி இறங்கிய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
Neuilly-sur-Marne நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பதின்மவயதுடைய சிறுவர்கள் ஆறு பேர் இணைந்து மாலை 4.30 மணி அளவில் Marne ஆற்றில் இறங்கியுள்ளனர்.
அவர்களில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு அவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.
குறித்த சிறுவனுக்கு நீச்சல் தெரியாது என தெரிவிக்கப்பட்டுகிறது. அத்தோடு அவர்கள் நீந்தச் சென்ற இடம் தடைசெய்யப்பட்ட ஆழமான பகுதி எனவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan