திடீரென தீப்பற்றி எரிந்த 67 மாடி கட்டிடம்
15 ஆனி 2025 ஞாயிறு 16:45 | பார்வைகள் : 4286
துபாயில் மெரினா நகரில் உள்ள டைகர் டவர் என்றும் அழைக்கப்படும் 67 மாடி கட்டிடத்தில் பெரும் தீ பரவல் ஏற்பட்டதாக துபாய் ஊடக அலுவலகம் (DMO) தெரிவித்துள்ளது.
குறித்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (13) இரவு ஏற்பட்டுள்ளதுடன் அதில் தங்கியிருந்த 3,820 குடியிருப்பாளர்கள் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துபாய் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஆறு மணி நேரம் அயராது உழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கட்டிடத்தில் ஏற்கனவே 2015 ஆண்டு மே மாதம், 47 வது மாடியில் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்து 48 வது மாடி வரை பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan