Paristamil Navigation Paristamil advert login

நிக்கோலா சர்கோஷியின் கெளரவம் பறிக்கப்படுகிறது!!

நிக்கோலா சர்கோஷியின் கெளரவம் பறிக்கப்படுகிறது!!

15 ஆனி 2025 ஞாயிறு 13:58 | பார்வைகள் : 896


 

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கு வழங்கப்பட்ட பிரான்சின் உயரிய  'Légion d'honneur' விருது பறிக்கப்பட்டுள்ளது.

2007-2012 வரை ஜனாதிபதியாக இருந்த சர்கோஷி 'ஒட்டுக்கேட்டல்' குற்றச்சாட்டில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவருக்கு தள்ளுபடி செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, இலத்திரணியல் காப்பு அணிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார்.

பின்னர், சில வாரங்களுக்கு முன்னர் அது அகற்றப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட Légion d'honneur கெளரவம் பறிக்கப்படுவதாக இன்று ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்