இன்று இரவு இடி மின்னல் தாக்குதல் - 36 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
14 ஆனி 2025 சனி 19:34 | பார்வைகள் : 3457
இன்று ஜூன் 14, சனிக்கிழமை இரவு நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதல்கள், அடை மழை போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, Allier, Aube, Côte-d'Or, Loire, Marne, Haute-Marne, Nièvre, Puy-de-Dôme, Rhône, Saône-et-Loire, Ardennes, Cantal, Haute-Loire, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Vosges மற்றும் Yonne ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும்,
Aisne, Alpes-Maritimes, Aveyron, Cher, Corrèze, Dordogne, Gironde, Indre, Isère, Jura, Landes, Loiret, Lot-et-Garonne, Nord, Pyrénées-Atlantiques, Haute-Saône, Seine-et-Marne மற்றும் Var ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo France அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan