மாணவர்களின் பைகளை காவலர்கள் சோதனை!

14 ஆனி 2025 சனி 13:55 | பார்வைகள் : 2096
நேற்று வெள்ளிக்கிழமை காலை, வலேன்ஸ் (Valence) நகரில் உள்ள Paul Valéry கொலேஜில் 12 காவலர்கள் மாணவர்களின் பைகள் மற்றும் சட்டைப் பைகளையும் சோதனை செய்துள்ளனர். இது அந்தக் கல்வி நிலையத்தில் முதல் முறை.
ஏன் இந்த சோதனைகள்?
கடந்த வாரம், Haute-Marne இல் ஒரு கல்லூரியில் நடந்த பை சோதனையின் போது,ஒரு மேற்பார்வையாளர் கத்தியால் கொல்லப்பட்டார்.
Drôme மாவட்டத்தில் இந்த வகை சோதனைகள் சில மாதங்களாக நடைபெறுகின்றன.
மாணவர்களிடம் இருந்து கத்திகள், ஆயுதங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்தச் சோதனைகள் நடத்தப்படுகிறது.
மாணவர்களின் உணர்வுகள்
"மிக பயமாக இருக்கிறது, எங்களிற்கு இது எல்லாம் பழக்கமில்லை"
"நான் ஒருமுறை கத்தி வைத்திருந்தேன்... ஆனால் அது ஒரு பிக்னிக் கழித்து வந்தபோது தான்!"
"3 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாணவன் கத்தியை கொண்டு வந்தான்... அதிர்ச்சி தான்"
என்ற கருத்துக்கள் பயத்துடனும் அதிர்ச்சியுடனும் தெரிவிக்கப்பட்டாலும் அனைவரும் காவற்துறையினர்க்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர்.
காவல்துறை மேலாளர்:
"இது முழுமையாக தடுப்பதற்காக அல்ல..முற்கூட்டியே தடுக்கும் முயற்சி. இளையவர்களிடையே வன்முறை, குறிப்பாக ஆயுதங்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன"
கொலேஜ் முதல்வர்:
"மாணவர்களுக்கு பெரும்பாலும் எதுவும் இல்ல. ஆனால் பணியாளர்கள் மனஉளைச்சலில் இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும், இது ஒரு பயமுறுத்தும் சூழல்"
நேற்று வெள்ளிக்கிமை
collège Paul Valéry - Valence
collège Europa de Montélimar
lycée professionnel Bouvet - Romans-sur-Isère
ஆகியவற்றில் மொத்தம் 912 மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர்
இருப்பினும் எந்தக் கத்தியோ ஆயுதமோ கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான சோதனைகள் பாடசாலை வருட முடிவு வரை தொடரும்.