பேருந்து விபத்து! - நால்வர் பலி.. 27 பேர் காயம்!!

13 ஆனி 2025 வெள்ளி 20:00 | பார்வைகள் : 5130
இன்று ஜூன் 13, வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
Sarthe மாவட்டத்தின் Degré எனும் சிறு நகரை ஊடறுக்கும் A81 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானது. அவர்களில் பெரும்பாலானோர் யுக்ரேனியர்கள் எனவும், அவர்களில் பலர் 15 தொடக்கம் 18 வயதுவரையுள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரள் மேற்கு யுக்ரேனில் உள்ள Kitsman நகரில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வந்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025