Paristamil Navigation Paristamil advert login

எயார் இந்தியா விபத்து : பரிஸ் விமானக்கண்காட்சிக்கு வருகை தர மறுத்துள்ள போயிங் CEO!!

எயார் இந்தியா விபத்து : பரிஸ் விமானக்கண்காட்சிக்கு வருகை தர மறுத்துள்ள போயிங் CEO!!

13 ஆனி 2025 வெள்ளி 12:51 | பார்வைகள் : 6509


 

அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தை அடுத்து போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Kelly Ortberg வருகை தர மறுத்துள்ளார்.

ஜூன் 16 ஆம் திகதி திங்கட்கிழமை பரிஸ் விமான சாகச நிகழ்ச்சி (salon du Bourget) இடம்பெற உள்ளது. உலகின் பல முக்கிய விமான நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பல நூறு நவீன விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் இந்த நிகழ்வில் Kelly Ortberg கலந்துகொள்ளமாட்டார் என சற்று முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் விமான நிலையில் இடம்பெற்ற விபத்தில் *250 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானது Boeing 787 ரக விமானமாகும். இந்த விபத்தை அடுத்தே அவர் கலந்துகொள்ள மாட்டார் என அறிவித்துள்ளார்.